×

‘காபி வித் கலெக்டர்’ கலந்துரையாடல் மாணவர்கள் பங்கேற்பு

 

விருதுநகர், ஜன. 12: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பில் சிறந்து விளங்கும் 30 மாணவர்களுடன், ‘காபி வித் கலெக்டர்’ கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார். மாணவ, மாணவியரிடம் அவர்களின் லட்சியம், துறை ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார்.

கலெக்டர் பேசுகையில், ‘‘பள்ளி, கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக்கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்ததாகும். எந்த கல்லூரியில் எந்த படிப்பிற்கு சேர வேண்டுமென்பதை, முன்னதாகவே முடிவு செய்து விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். பிகல்லூரி படிப்பில் சேர்வதற்கு, விருப்பதின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுக்கக்கூடாது. அனைவருக்கும் லட்சியம் உண்டு. அந்த லட்சியத்தை அடைய தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான முயற்சிகள், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

The post ‘காபி வித் கலெக்டர்’ கலந்துரையாடல் மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Jeyaseelan ,Dinakaran ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...